தமிழில் பச்சை என்ற தமிழ் படத்தில் நடித்தவர் தான் சரண்யா சசி.
இவர் தமிழை விட மலையாளத்தில் சோட்டா மும்பை, தலபாபு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு என பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் மூளையில் கட்டி ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பதினொரு அறுவை சிகிச்சை செய்து உயிர் பிழைத்த அவர் தற்போது கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவருக்கு செயற்கை சுவாசம் வைத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.