தற்போது நாட்டில் அமுலாகியுள்ள மாகாணத்தடையின் போது மாகாணங்களுக்கிடையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டவர்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி சிரேஸ்ட காவல்துறை மா அதிபர் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடையை எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நேற்று முடிவு எடுக்கப்பட்டிருந்தத.
மேலும் மேல் மாகாணத்திலிருந்து உள்நுழையும் மற்றும் வெளியேறும் 14 இடங்களில் வீதித் தடைகள் மூலம் கடுமையான சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவ்வாறு ஏனைய மாகாணங்களிலும் வீதித் தடை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் மாகாண எல்லைகளை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை ஊடக பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.