தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு.

0

நாடு பூராகவும் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 339 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முகக் கவசம் அணியாமை மற்றும் மாகாண எல்லைகளை கடந்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலே குறித்த நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 47,579பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

Leave a Reply