தமிழகத்தில் இன்று முதல் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசி.

0

தமிழகத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொவிட் தடுப்பூசிகள் போடுவதற்கு மத்திய சுகாதார அமைச்சகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடப்படும் நிகழ்வு ஆரம்பமானது.

இதற்கமைய 7 லட்சத்து 38 ஆயிரத்து 583 கர்ப்பிணிகளுக்கு குறித்த தடுப்பூசி போடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி பெற்றுக் கொள்ளும் கர்ப்பிணி பெண்களுகள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள சிறப்பு முகாம்களுக்கு சென்று பெற்றுக் கொள்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொவிட் பரவல் குறைந்துள்ள காரணத்தால் கூடியளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விதைக்கப்பட்ட தளர்வுகள் தொடர வேண்டுமென்றால் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply