இந்தியாவில் மீண்டும் சடுதியாக அதிகரித்த கொரோன.

0

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்தியாவில் மொத்தமாக 3,05,02,362 பேர் குறித்த தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.

அத்துடன் நாடு பூராவும் ஒரே நாளில் 738 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இதுவரையில் கொவிட் தொற்று மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,01,050 ஆக உயர்வடைந்துள்ளது.

அவ்வாறு இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 57,477 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியிருந்தார்.

நாட்டில் இதுவரை காலமும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96, 05, 779 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,95,533 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply