அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு லட்சம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வர்த்தகத் துறையின் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் செயற்பாட்டினை முற்றாகத் தடுப்பதற்க்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.