பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ள கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம்.

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் இந்த ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளது.

இதற்கமைய கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமை அளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்கு ஐந்து நடன குழுக்களை மாத்திரமே இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நடன குழுவினர் வருடாந்த உற்சவ ஊர்வலத்திற்கு முன்னதாக கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply