இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியுள்ளது.

0

இலங்கையின் வங்கிக் கட்டமைப்பு மிகப்பெரிய சவாலுக்குள்ளாகியிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வணிக வங்கி மற்றும் வர்த்தகம் பற்றி ஆய்வுகளை நடத்துகின்ற பிச் ரேட்டிங் என்ற அமைப்பு தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அத்துடன் அன்னியச் செலவாணி சரிவை ஈடு செய்வதற்காக இலங்கை மத்திய வங்கி ஊடாக அரசாங்கம் வெளியீடுகின்ற பிணை, முறிகள் மற்றும் வட்டி வீதம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் 2020ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை வங்கி கட்டமைப்பிடம் இருந்த சொத்து பெறுமதியில் மூன்றில் ஒரு பகுதி அரசாங்கத்திற்கு திறந்துவிடப்பட்டிருப்பதாகவும் அதனால் உள்நாட்டு வங்கிகள் அரசாங்கத்தின் பிணை முறிகளை கொள்வனவு செய்வதன் ஊடாக வெளிநாட்டு அந்நிய செலவாணி சந்தை திறந்து விடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply