நாட்டில் கொவிட் தொற்றின்அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற நிலையில் மேலும் 1,173 பேர் புதிய தொற்றாளர்களாக இன்று அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் இதுவரையில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 260,262 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.