கடவுளின் மறு வடிவம் மருத்துவர்கள் -பிரதமர் நரேந்திர மோடியின் உரை.

0

தேசிய மருத்துவர்கள் தினத்தை யொட்டி இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மருத்துவர்கள் தினத்தன்று அனைத்து மருத்துவர்களும் 130 கோடி இந்தியர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மருத்துவர்கள் கடவுளின் மறு வடிவம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இன்று தேசம் தொற்று நோயை எதிர்த்துப் போராடும் போது இலட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்ற மருத்துவர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் தங்களின் உயிரை கொடுத்த மருத்துவர்களும் இருக்கின்றார்கள்.

இந்நிலையில் உயிர் தியாகம் செய்த அவர்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply