உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்.

0

கொவிட் தொற்றின் அச்சுறுத்தல் நாளாந்தம் அதிகரித்து
வருகின்ற நிலையில் இன்றைய தினம் அதிகாலை முதல் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ் மாவட்டத்தில், காரைநகரில் உள்ள கலவந்தால்வு பகுதி, ஊர்காவற்துறை பிரதேசத்தை சேர்ந்த கள்ளித் தெரு பகுதியும்,

அத்துடன் கண்டி மாவட்டத்தில், சுதுஹம்பொல பகுதியை சேர்ந்த வெலமெட வீதியும்,

அவ்வாறு நுவரெலியா மாவட்டத்தில், கொத்மலை, டன்சின் கிராம உத்தியோகத்தர் பிரிவை சேர்ந்த மத்திய பகுதி ஆகிய பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply