அதிகரிக்கப் போகிறது பாணின் விலை 10 ரூபாவினால்!

0

நாட்டில் ஒவ்வெரு பொருட்களின் விலையும் உயர்வடைந்து வருகின்ற நிலையில் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கோதுமை மாவை விநியோகிப்பதற்கு இரண்டு பிரதான நிறுவனங்கள் காணப்படுகின்றன.

அவற்றுள் ஒரு நிறுவனம் ஒரு கிலோ மாவின் விலையை 18 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

இந்த செயற்பாடு காரணத்தினால் தாங்கள் மிகுந்த அசௌகரியத்தை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஆகவே அரசாங்கம் குறித்த விடயம் தொடர்பில் தலையீடு செய்து பத்து ரூபாயை விடவும் குறைந்த விலையில் ஆவது பாணின் விலையை அதிகரித்து தமது பிரச்சினைக்கு உரிய தீர்வினை காண வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply