இன்றைய வானிலை தொடர்பான தகவல்.

0

நாட்டின் பல பாகங்களிலும் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது

இதற்கமைய மேல் சப்ரகமுவ வட மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலிய மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 மில்லி மீற்றர் அளவான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் அவ்வப்போது மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

ஆகவே பொதுமக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply