வற்றாத செல்வம் வீட்டில் நிலைத்து தங்க வேண்டுமா? அதற்கு ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டியவை..!

0

என்றுமே வற்றாத செல்வம் உங்கள் வீட்டில் உண்டாக ஆண்கள் செய்ய வேண்டிய பரிகார முறைகள்:

* அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு உங்களின் வலது உள்ளங்கையில் சிறிது அளவு சந்தனம் அல்லது மஞ்சள் பூசிக் கொள்ள வேண்டும்.

* அதன்பின் ஒரு ரூபாய் அல்லது ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அதனுடன் வெற்றிவேர் வைத்து கொள்ள வேண்டும்.

* உள்ளங்கையை உங்கள் வாய்க்கு அருகில் கொண்டு சென்று ‘ஓம் குபேர லட்சுமியே நமஹ’ என்கிற அதீத மந்திரத்தை குபேரனை மனதில் நன்கு தியானித்தவாரே உங்களால் முடிந்த எண்ணிக்கையில் அதாவது 100 அல்லது 200 தடவை தியானித்து வரவேண்டும்.

* இவ்வாறு நீங்கள் பூஜை செய்து முடித்தவுடன் கையில் வைத்திருந்த அந்த சில்லரை நாணயங்கள் அன்றைய தினம் வரவு-செலவு பயன்பாட்டிற்கு வைத்து கொள்ளவேண்டும்.

* மறுநாள் இந்த பூஜைக்கு ஒரு புது நாணயத்தையும் வெற்றிவேர் சிறு சிறு துண்டு எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டு மேற்கண்ட மந்திரத்தை அதே முறையில் உச்சாடனம் செய்ய வேண்டும்.

* பூஜை முறையை தினமும் அதிகாலை 5: 30 மணிக்கு உள்ளாக செய்வதால் மிக விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கும்.

தொடர்ந்து நாணயங்கள் வைத்து குபேர லட்சுமி மந்திரம் துதித்து பூஜை செய்பவர்களுக்கு கண்டிப்பாக வெளியில் பணம் ஈட்டுவதற்கான வழிகள் பிறக்கும். இந்தப் பூஜை அதிக அளவு நல்ல தனவரவு உண்டாகும்.- Source: kalakkalcinema


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply