திருநீறுக்கு பதிலாக தங்கத்தை பிரசாதமாக தரும் மகாலட்சுமி கோயில்….

0

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வார்கள். நம் வாழ்க்கையில் இறை வழிபாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

கோயிலுக்கு எதுக்கு போகிறோம் . நம் கவலைகளை மறந்து , நமக்கு தேவையானவை இறைவனிடம் வேண்டி முறையிட்டு பிரார்த்தனை செய்து விட்டு வருவோம் . சில கோயில்களில் பிரசாதமாக திருநீறு , பூக்கள் , அம்மன் கோவிலாக இருந்தால் , மஞ்சள் , குங்குமம் ஆகியவையும் கொடுப்பார்கள் . பெருமாள் கோவிலில் துளசியை பிரசாதமாகக் கொடுப்பார்கள் . அதைத்தாண்டி , சாப்பிடுவதற்கான கொடுக்கப்படும் பிரசாதங்களும் உண்டு . அதாவது லட்டு , புளியோதரை , லெமன் சாதம் , பொங்கல் , பருப்பு கூழ் , சுண்டல் இப்படி கொடுப்பார்கள் .

தங்க கோபுரம் பார்த்து இருக்கிறோம் , தங்க கோவில் கூட பார்த்து இருக்கிறோம் . ஆனால் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு , தங்க காசுகளையே பிரசாதமாக கொடுக்கும் ஒருகோவில் இந்தியாவில் உள்ளது .

இந்த அற்புதமான கோயில் மகாராஷ்டிர மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் ரத்லம் என்னும் ரத்னபுரி பகுதியில் தான் இருக்கிறது . இந்த ரத்னபுரி கோவிலுக்குள் உறைந்திருக்கும் கடவுள் நமக்கு வளங்களை அள்ளித் தருகின்ற லட்சுமி தேவி .

வறுமை போக்க வெறுமனே இங்கு வருபவர்களுக்கு பக்திக்காக மட்டும் தங்கம் பிரசாதமாகக் கொடுப்பது இல்லை . இங்கு வருகுின்ற ஏழைகள் , தங்களுடைய வறுமையைப் போக்கிக் கொள்வதற்காகவே தங்கக் காசுகள் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன .

காணிக்கையாக இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் , குறிப்பாக வசதி படைத்தவர்கள் தாங்கள் செலுத்துகின்ற காணிக்கையைப் பணமாகச் செலுத்துவதில்லை . காணிக்கை செலுத்த நினைப்பவர்கள் தங்களால் இயன்ற அளவு தங்கம் அல்லது வெள்ளியை காணிக்கையாகச் செலுத்துகின்றனர் .

பக்தர்கள் கொடுக்கும் தங்க காசுகள் குவியல் போல் குவித்து வைத்து இருப்பார்கள் . இந்த மலை போல குவிக்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை , வருடத்தின் முக்கியப் பண்டிகையாக இந்தியாவில் கொண்டாடப்படுகிற தீபாவளியன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக அந்த தங்கம் மற்றும் வெள்ளி கொடுக்கப்படுகிறது .

ஒவ்வொரு ஆண்டு தீபாவளியன்று மட்டும் தான் தங்கம் பிரசாதமாக வழங்கப்படும் . தினமும் வழங்கப்படும் வழக்கம் இங்கு கிடையாது . இங்கு பிரசாதமாக தங்கம் கிடைத்துவிட்டால் , வாழ்க்கையில் பணக்கஷ்டம் , வறுமை என அத்தனையும் தீர்ந்து மகாலட்சுமியே தங்களுடைய வீடுகளுக்குள் நுழைவதாகவே பக்தர்கள் கருதுகிறார்கள் .

இந்த தங்கக் காசை இறைவனின் அருளாக பாவிப்பதால் , அதை யாரிடமும் கொடுப்பதோ விற்பதோ கிடையாது .- Source: timestamil


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply