கணவன்-மனைவிக்கு இடையே நெருக்கம்’ குறைய காரணம் அவர்கள் படுக்கையறையில் செய்யும் இந்த தவறுகள்தான்!

0

கணவன், மனைவிக்கு இடையே இருக்கும் அன்பும், நெருக்கமும் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டுமென்று விரும்பினால் இறந்த உங்கள் முன்னோர்களின் படங்களையோ அல்லது கடவுள்களின் படங்களையோ உங்கள் படுக்கையறையில் மாட்டி வைப்பதை தவிர்க்கவும். இவை உங்களுக்குள் எழும் காதல் அதிர்வுகளை விரட்டக்கூடியவை ஆகும்.

குறிப்பு 2

தம்பதியினர் எப்பொழுதும் அவர்களின் படுக்கையை அறையின் மத்தியில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த தவறான பழக்கம் பெரும்பாலான குடும்பங்களில் உள்ளது. எப்போதும் படுக்கையை இரண்டு சுவர்களின் மீது படும்படி மட்டுமே போடவேண்டும்

குறிப்பு 3

படுக்கையின் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு புறம் பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் துணையின் மீதான நாட்டத்தை அதிகரிப்பதுடன் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது. வடக்கு அல்லது கிழக்கு பக்கமாக தலைவைத்து தூங்குவது தம்பதிகளுக்கு ஒருவர் மீது ஒருவருக்கு எரிச்சலை ஏற்படுத்துவத்துவதுடன் தேவையில்லாத பிரச்சினைகளையும் உருவாக்கும்.

குறிப்பு 4

இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி டிரஸ்ஸிங் டேபிள் எப்பொழுதும் உங்கள் படுக்கையறைக்குள் இருக்கக்கூடாது. ஏனெனில் இது உங்கள் அறைக்குள் தொடர்ந்து எதிர்மறை சக்திகளை பரவச்செய்யும

குறிப்பு 5

தம்பதியினர் ஒன்றாக படுக்கும் அறையை எப்பொழுதும் வெளிர் நிறங்களில் பெயிண்ட் அடிக்கக்கூடாது. குறிப்பாக வெள்ளை நிறத்தில் அடிக்கக்கூடாது. பிரகாசமான சிவப்பு, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் பெயிண்ட் அடிப்பது கணவன், மனைவிக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.

குறிப்பு 6

படுக்கையறைக்குள் கண்ணாடி வைப்பதை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. அப்படியே வைத்தாலும் அவர்களின் உருவம் தூங்கும்போது கண்ணாடியில் பிரதிபலிக்காத வண்ணம் பார்த்துசரியான திசையில் வைக்க வேண்டும்.

குறிப்பு 7

தேவையில்லாத சாமான்களிடம் இருந்து தள்ளியே இருங்கள் உங்கள் அறையை அலங்கரிக்க தேவையில்லாத பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்கள் அறைக்குள் இருக்கும் இடைஞ்சல் உங்களுக்குள் இருக்கும் நெருக்கத்தை சிதைக்கக்கூடியதாகும். இதனால் உங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் எழும்.

குறிப்பு 8

சாஸ்திரங்களின் படி தம்பதிகள் ஒன்றாக படுக்கும் கட்டில் உலோகத்தால் செய்யப்பட்டதாக இருக்கக்கூடாது. மரக்கட்டில் தவிர மற்ற அனைத்து உலோகக்கட்டில்களும் தமபதிகளுக்குள் சண்டையை ஏற்படுத்தக்கூடும். இதனால் நிரந்தர பிரிவு கூட ஏற்படலாம்.

குறிப்பு 9

வீட்டில் இருக்கும் ஜன்னல்களும் சரி, கதவுகளும் சரி எப்பொழுதும் இரட்டைப்படையில்தான் இருக்க வேண்டும். மேலும் அவை உட்புறமாக திறக்க கூடியதாக இருக்க வேண்டுமே தவிர வெளிப்புறம் திறப்பதாக இருக்கக்கூடாது. இது உங்கள் இல்லத்திற்குள் நேர்மறை சக்திகளை அழைத்துவரும்.

குறிப்பு 10

உங்கள் உறவில் ஏற்படும் விரிசல்களை தவிர்க்க வீட்டில் ஒரு சாமி படத்திற்கு மேல் வைக்காமல் இருப்பதில் உறுதியாக இருங்கள். அப்படியே வைத்தாலும் அவை ஒன்றுக்கொன்று எதிராக இருக்கும்படி வைக்கவேகூடாது. அவ்வாறு வைப்பது தமபதிகளுக்கிடையே நிரந்தர பிரிவை ஏற்படுத்தும்.- Source: tamil.eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply