நாட்டில் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள் கூட்டம் கூட்டமாக தலைநகர் கொழும்பை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெவ்ளியிடப்படுள்ளது.
அத்துடன் திங்கட்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் அமைதியாக போராடி வந்தவர்களை அரசாங்க ஆதரவாளர்கள் தாக்கியதை அடுத்து நாடு முழுவமு் கலவரம் வெடித்தது.
இதனையடுத்து, கலவரத்தை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இலங்கையில் வெடித்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 300 பேர் காயமடைந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நேற்று தலைநகர் கொழும்பில் ஆயுதமேந்திய இராணுவ வாகனங்கள் குவிக்கப்பட்டது.
இந்நிலையில், அதிகாரிகள் இன்று காலை 7 மணிக்கு ஊரடங்கை தளர்த்தியதை தொடர்ந்து, சொந்த ஊர் திரும்ப நூற்றுக்கணக்கான மக்கள் கொழும்பில் உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



