நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அரசுத்தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதே இதன் பிரதான நோக்கமாகும் என சபாநாயகர் குறிப்பிட்டார்.
அத்துடன் கடந்த 6ஆம் திகதி சபாநாயகரினால் நாடாளுமன்ற கூட்டத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
இதற்கமைய முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் காரணமாக புதிய பிரதமரை தெரிவு செய்யும் பொறுப்பு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று நாளை இடம்பெறவுள்ளது.
மேலும் குறித்த கூட்டம் நாளை பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெறும்.



