தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த சிறப்பு மலர்
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினால் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டப்பேரவை மண்டபத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் இந்த சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா குறித்த சிறப்பு மலரையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
கடந்த ஆகஸ்டு 2-ஆம் திகதி குறித்த சட்டமன்ற நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இதன்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



