காலி முகத்திடல் கோட்டா கோ கம போராட்டம் இடம்பெற்ற பிரதேசத்திலும் நாட்டின் ஏனைய பகுதியில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்நிலையில் காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மை போது 218 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
மேலும் அவர்களில் ஒருவர் காவல்துறையை உப பரிசோதகர் என குறிப்பிடப்பட்டுள்ளது.



