இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகின்றது.
இதனால் மக்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக சமுர்த்தி அபிவிருத்தி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன் மூலம் குறைந்த வருமானங்கொண்ட 33 இலட்ச மக்கள் நன்மையடையவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



