மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நிலக்கரி இறக்குமதிக்காக ஒதுக்கப்பட்ட பணம் எரிபொருள் இறக்குமதிக்கு பயன்படுத்தப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது.
அத்துடன் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால், மின் உற்பத்தி நிலையங்களில் தினமும் 15 மணி நேரம் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஏப்ரல் இறுதிக்குள் நிலக்கரி இறக்குமதியை ஆரம்பிக்காவிட்டால் அடுத்த சீசனில் இலங்கைக்கு நிலக்கரியை கொண்டு வர முடியாது.
மேலும் அடுத்த சில வாரங்களுக்குள் நிலக்கரியை இறக்குமதி செய்வது அவசியம், இல்லையெனில் நாடு சில நாட்களுக்கு இருளில் மூழ்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



