விருதுநகர் நகராட்சியை முதல் முறையாக கைப்பற்றி தி.மு.க.

0

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19-ந்தேதி இடம்பெற்றது.

குறித்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி, அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் தேர்தல் களத்தில் அனல் பறந்தது.

அத்துடன் இன்று காலை 8 மணி முதல் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

இவற்றுள் விருதுநகர் நகராட்சியை தி.மு.க. முதல் முறையாக கைப்பற்றியுள்ளது.

மொத்தமுள்ள 36 வார்டுகளில் திமுக – 20, காங்கிரஸ் -8, அதிமுக – 3 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply