நாட்டின் பல பாகங்களிலும் சிறிதளவில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக்கூடும்.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலவெளியில் பனி மூட்டமான வானிலை நிலவும்.



