நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, நுவரெலியா, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேலும் நாட்டில் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.



