அனைத்து பெற்றோருக்கும் விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்.

0

பாடசாலைகள் கல்விச் செயற்பாடுகள் வழமைபோன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாடசாலை மாணவர்களிடையே கொவிட் தொற்று பரவுவதை தடுக்கும் பொறுப்பு பிள்ளைகள், பெற்றோர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவருக்குமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவர்கள் பொறுப்புடன் நடந்து கொண்டால் மாத்திரமே இந்த தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிள்ளைகளுக்கு கொவிட் அறிகுறிகள் காணப்படுமாயின் அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவர் பாதிக்கப்பட்டால் தங்கள் குழந்தைகளை பாடசாலைக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல முன்னணிப் பாடசாலைகளில் இடம் குறைந்த வகுப்பறையில் 40 அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்று வருவதாகவும், அவ்வாறான வகுப்பில் உள்ள ஒரு பிள்ளைக்கு கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதனால் ஏற்படும் அபாயம் அதிகம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply