கொழும்பு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு…!

0

கொழும்பில் உள்ள பல பகுதிகளுக்கு 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த பிரதேசங்களுக்கு நேற்றைய தினம் (26-12-2021) இரவு 9 மணி முதல் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நீர் வெட்டு ஏற்படும் பகுதிகளின் விபரம்: கொழும்பு, கோட்டே, கடுவெல, தெஹிவளை மற்றும் கல்கிசை நகர சபைக்குட்பட்ட பகுதி, மஹரகம , பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை நகர சபைக்குட்பட்ட பகுதி மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் , அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply