மேல் மாகாணத்தில் நீண்டகாலமாக வசிக்கும் 37 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதற்கமைய கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 37 வீடுகளில் நீண்ட காலமாக தங்கி இருந்தவர்களுக்கே, இந்த காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நேற்றைய தினம் இடம்பெற்றது.
மேலும் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபைத் தலைவர் துமிந்த சில்வா ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.