ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

0

நாட்டில் ஏற்பட்ட கொவிட் அச்சுறுத்தல் சூழ்நிலை காரணத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியாவுக்கான விமான சேவைகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கொவிட் நோய் தொற்றுக்கு முன்பு இருந்ததைப் போலவே ஸ்ரீலங்கன் விமான சேவையை மீண்டும் நிறுவ உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இந்திய நடவடிக்கைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்த இதுவே சிறந்த முடிவு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உலகளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், சுற்றுலா பயணிகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply