தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களிலும் வரும் 28 ஆம் திகதி வரை கன மழை பெய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் பிரகாரம் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருகின்றது.
இதன் எதிரொலி காரணத்தால் புதுக்கோட்டை, திருவாவூர், மயிலாடுதுறை , ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.