பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் பங்கு பெறுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று அதிகாலை ஐக்கிய இராச்சியம் நோக்கி விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த மாநாடு ஸ்கொட்லாந்தின் க்ளாஸ்கோவில் இடம்பெறவுள்ளது.
மேலும் நாளை முதல் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



