காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக கைது.

0

போதை பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அதிரடியாக காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் கைது செயப்படுள்ளார்.

இதற்கமைய குறித்த கைது நடவடிக்கை
ராஜகிரிய, பொல்வத்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இடம்பெற்றது.

அத்துடன் 42 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வழங்கிய வாக்கு மூலத்திற்கமைய அவரின் கை தொலை பேசியில் பதிவான அழைப்புகளை ஆராய்ந்த போது குறித்த போதைப்பொருள் வெலிக்கடை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவருடையது என ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சீருடை அணிந்துள்ள காவல்துறை உத்தியோகத்தரிடமிருந்து சுமார் பாத்து கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply