இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன, இன்று இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய இலங்கையின் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பினை ஏற்று இவர் குறித்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல அரசாங்க தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



