வவுனியா மாவட்டம் பம்பைமடு குளத்தில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்றிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அத்துடன் வவுனியா பம்பைமடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.



