நாடு முழுவதும் இன்று இரவு 10 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரை நாளாந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய குறித்த ஊரடங்குச் சட்டம் இன்று இரவு தொடக்கம் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்..



