இலங்கையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

0

நாட்டின் பல பகுதிகளும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யக்கூடும்.

அத்துடன் சில இடங்களில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பயிற்சியும் எதிர்பார்க்கப்படும்.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

இந்நிலையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு
பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply