அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
இதற்கமைய குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 19 ஆம் திகதியன்று முற்பகல் 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அத்துடன் அடுத்த தேர்தல் மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு விடயங்கள் தொடர்பிலும் இதன்போது பேசப்படும்.
மேலும் இதுவரையில் தேர்தல்கள் ஆணைக்குழு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு அறிவிப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



