80 கிலோ கிராம் நிறையுடைய மற்றுமொறு புதியநீலக்கல் கொத்தாணியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த நீலக்கல் கொத்தணி இரத்தினபுரி இறக்குவானை பிரதேசத்திலே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட நீலக்கல் கொத்தணி இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையினரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன் இதன் பெறுமதி சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலராகும் என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நீலக்கல் கொத்தணி எதிர்வரும் நவம்பர் மாதம் சீனாவில் நடைபெறவுள்ள ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



