அரச ஊழியர்கள் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட முக்கிய தகவல்!

0

அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 2ஆம் திகதி முதல் உரிய சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழமைபோன்று அனைத்து அரச ஊழியர்களும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களைக் கொண்டு அத்தியாவசியமான அரசு பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிருபம் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

Leave a Reply