காங்கேசன்துறை கடற் பிராந்தியத்திற்கு அப்பால் 31 மிலியன் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் மூவரும் காங்கேசன்துறை கடற் பிராந்தியத்திற்கு அப்பால் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது
கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 3 கிலோ 750 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் 20 -40 இடைப்பட்ட வயதினையுடைய பருத்தித்துறை, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.



