திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமக்கள் மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி!

0

திருமண பந்தத்தில் இணையவுள்ள மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோர் வெவ்வேறு மாகாணங்களை சேர்ந்தவர்களாயின் பயண கட்டுப்பாடு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமையை பயண கட்டுப்பாடுகளின் போது திருமண நிகழ்வுகளை நடத்துவதில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரின் பெற்றோர்களும் மகாணங்களுக்கிடையில் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply