சிலாபம் நகரசபைத் தவிசாளர் துஷான் அபேவிக்ரம உள்ளிட்ட இருவர் இரு நபர்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிலாபம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய தாக்கப்பட்ட இருவரும் சிலாபம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக
காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.



