நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, வட மேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்றைய தினம் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படும்.
அத்துடன் வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் மழை பெய்யும் என்பதுடன் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் கூடிய சாத்தியம் காணப்படும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளில் அவ்வப்போது மத்தியானத்துக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்க வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கி அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



