சிவனின் கோபத்திலிருந்து தப்பிக்க முடியாத நாம் செய்யும் பாவங்கள்:
1) பிறர் மனைவி அல்லது கணவன் மீது ஆசைப்படுவது.
2) அடுத்தவரின் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரின் சொத்துக்களை அபகரிக்க நினைப்பது.
3) உங்களின் சுய நலத்திற்காக எளியவர்கள் மீது பழியை சுமத்துவது.
4) மாதவிலக்கின் போதும், கர்ப்பமாக உள்ள பெண்களையும் மனது புண்படும்படி, தீய வார்த்தைகளால் திட்டுவது.
5) ஒருவன் தொடர்ந்து சிறிதும் நன்மை
செய்யாமல், தீய வழியிலே செல்வது.
6) இன்னொருவரைப் பற்றி அப்படமான பொய் கூறி அவரை சீர்குலைய வைப்பது.
7) வதந்திகளையும், தேவையில்லாத விஷயங்களையும் பரப்புவது.
8) ஒருவரின் செய்கையால் மற்றொருவரின் வாழ்வு நாசமாவது, கொலை செய்வது.
9) தெய்வமாக பார்க்கப்படும் மாட்டை உண்பது.
10) வன்முறையை கையாள்வது. குழந்தைகளுக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராகவும் செய்யும் வன்முறைகள்.
11) மாதா, பிதா, குரு மற்றும் வயதானவர்களை மரியாதையின்றி நடத்துவது, அவர்களை அடித்து துன்புறுத்துவது.
12) முறையற்ற வழியில் சொத்து சேர்ப்பது, தானமாக கொடுத்த பொருளை திரும்ப வாங்குவது.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.