
பவானியாகிய சக்தி தேவியை போற்றும் மந்திரம் இது. இந்தத் துதியை தினமும் துதிப்பது நன்மையை தரும். வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை துதித்து வர உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவ வல்ல பாம்பவார்தி பஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம் ஹாரகாரிணீம்
முனிபி ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம்
மோக்ஷதாயினீம்
பொருள்: மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
