துன்பங்கள் நீங்க சிவபெருமானுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

சிவபெருமான் வீற்றிருக்கும் திருக்கயிலையில், அவருக்கு நிழல் தருவது உத்தால மரம். இந்த மரத்தை பூலோகத்தில் தென் தமிழ்நாட்டின் ஒரு பகுதியில் தரிசிக்க முடியும். அந்த இடம் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலத்தில் உள்ள உத்தவேதீஸ்வரர் ஆலயம்.

சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த இடம் தஞ்சாவூர் அருகே உள்ள திருமணஞ்சேரி திருத்தலம். அந்த திருமணத்திற்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட இடமாக, குத்தாலம் திருத்தலம் சொல்லப்படுகிறது. அந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு உத்தால மரம் வந்ததாக தல புராணம் தெரிவிக்கிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சனீஸ்வர பகவான், கல்யாண சனீஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல இறைவனை வழிபாடு செய்தால் கஷ்டங்கள் நீங்கும் என்பது ஐதீகம். – Source: Maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply