அதிகமான பெண்களுக்கு கருச்சிதைவு உண்டாவதற்கு இவைதான் காரணம்..!

0

கருவுற்றது தெரிந்தபிறகு சுமார் 15 முதல் 25 சதவீதப் பெண்களுக்கு கருச்சிதைவு நிகழ்ந்து விடுகிறது. 80 சதவீத கருச்சிதைவு கருவுற்ற முதல் 3 மாதங்களுக்குள் நிகழ்வதால் அந்த சமயங்களில் பெண்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பொதுவாக 20 வாரங்கள் நிறைவடைந்த பிறகு கருச்சிதைவு ஏற்படுவது அரிது என்றாலும் அவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பு உள்ளது.
பெண்ணுறுப்பில் பொட்டுப்பொட்டாக ரத்தக்கசிவில் தொடங்கக்கூடும்.

தொடர்ந்து ரத்தக்கசிவு அதிகரிக்கும்.

கடுமையான தசைப்பிடிப்பு, கால் தசை பிடிப்பு

அடிவயிற்றில் வலி

காய்ச்சல்

சோர்வு, அயர்ச்சி, சக்தியே இல்லாதது போல உணர்தல்

முதுகு வலி

மேலே கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உஷாராகி உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவேண்டும். அவசர சிகிச்சை அவசியம்.

கருச்சிதைவு உண்டாகக் காரணம்?

பரம்பரை மரபணுக் கோளாறுகள் காரணமாக கருச்சிதைவு நிகழக்கூடும். இந்த வகை கருச்சிதைவுக்கு தாயை பழி சொல்லக்கூடாது.

இதுதவிர வேறுகாரணங்களாலும் கருச்சிதைவு நிகழ்கிறது. அவை:
நோய்த்தொற்று

கர்ப்பிணித் தாய்க்கு இருக்கும் சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு,

தைராய்டு பிரச்னை

நாளச்சுரப்பி எனப்படும் ஹார்மோன் கோளாறு

நோய் எதிர்ப்புத்தன்மை குறைபாடுகள்

தாயின் பிற உடலியல் சார்ந்த பிரச்னைகள்

சிறுநீர்ப்பை கோளாறுகள்

ஆகியவை முக்கியக் காரணங்களாகும். இது தவிர,

35 வயதை கடந்த கர்ப்பிணிகள் நீரிழிவு, தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் மூன்று முறை அல்லது அதற்கு மேல் கருச்சிதைவுக்கு ஆளானவர்கள் ஆகியோருக்கு கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்

வலுவற்ற கர்ப்பப்பையினால் கருவை தாங்க முடியாமல் போகலாம். இந்தப் பிரச்னை உடையவர்களுக்கு பெரும்பாலும் 4-6 மாத காலத்தில் கருச்சிதைவு நிகழ வாய்ப்பு உண்டு.

வலுவிழந்த கர்ப்பப்பை உள்ள கர்ப்பிணிகளுக்கு உடலில் திடீரென ஓர் அழுத்தம் உண்டாகி பனிக்குடம் உடைந்து கருச்சிதைவு நிகழக்கூடும்.

இதுபோன்ற பிரச்னையை சந்தித்த தாய்மார்களுக்கு அவர்கள் மீண்டும் கருவுறும்நிலையில் கர்ப்பப்பையின் வாயை தையல் மூலம் மகப்பேறு நல மருத்துவர் மூடிவிடுவர்.

இதனால் கர்ப்பப்பையில் இருக்கும் கரு பாதுகாப்பாக இருக்கும். பொதுவாக கருவுற்ற 3 மாதத்துக்குப் பிறகே இந்த நடைமுறையை மருத்துவர்கள் மேற்கொள்வர்

பிரசவ நேரத்தில் அந்தத் தையலை மருத்துவர்கள் பிரித்து பிரசவம் பார்ப்பார்கள்.

வருமுன் காப்போம் என்று சொல்வது போல கருச்சிதைவு அறிகுறிகளை தாய்மார்கள் அறிந்து கொண்டிருந்தாலே போதும் சுகப்பிரசவத்திலேயே முடியும் உங்கள் விருப்பம். – Source: eenaduindia


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply