கட்டுநாயக்க விமான நிலைய சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமான நிலைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் விமான நிலைய சேவைகளை தானியங்கி முறையில் தவிர்த்து, வழமை போன்று மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.