ஆயுதம் தாங்கிய படையினருக்கு அதிபர் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு.

0

பொதுமக்களின் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதிபரால் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08.11.2022) சபைக்கு அறிவித்துள்ளார்.

இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானதை தொடர்ந்து சபாநாயகர் இந்த உத்தரவை சபைக்கு அறிவித்தார்.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) 12வது பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இரண்டாம் இணைப்பு
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சி கொண்டு வந்த, சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக்கூட்டம் இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

Leave a Reply