சற்று முன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு.

0

நாடாளுமன்றம் இன்று (08.11.2022) காலை 09.30 மணிக்கு கூடியுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

அதன்படி, இந்த விவாதம் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை மதிப்புக்கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை, கலால் சட்டத்தின் கீழ் இரண்டு அறிவிப்புகள், நாணயச் சட்டத்தின் கீழ் ஒரு உத்தரவு, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குமுறைகள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிச் சட்டத்தின் கீழ் மூன்று விதிமுறைகள் என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளதாக அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply